Thursday, September 23, 2021

எழுத்துச் சீர்திருத்தம்

 எழுத்துச் சீர்திருத்தம்




சீராகத் திருத்துதலும்

சீரைத் திருத்துதலும்


ஈ.வெ.ரா. பெரியாரின் இயல்புகளுள் ஒன்று சிக்கனம் . அவர் காலத் தட்டச்சு, அச்சு இயந்திரங்களை நோக்கி வாகாகச் சில எழுத்துகளை - வரிவடிவங்களை - சீர்மைப் படுத்திக் கையாண்டார். 


அவர் கையால் எழுதும் போது இறுதி வரை பழைய வடிவங்களையே கொண்டார். காரணம் பழக்கம் மட்டுமன்று; தெளிவுமாம்.

(றா, ளை , னை ஆகியவற்றை அவர் கையெழுத்திலிருந்து காட்டியிருக்கிறேன்)






வரிவடிவம் என்பது எழுது முறை, எழுதுகருவிகள் , எழுதப்படு பொருள் ஆகியவற்றுக்கியைய அமையும்; அமைவது நல்லது; தமிழில் அவ்வாறு அமைந்திருந்தது.


T வடிவில் முடியும் ண, ன, இரட்டை வளைவு கொண்ட ற ஆகிய மூன்றன் ஆகார உயிர்மெய்கள் மட்டுமே கீழே வளைக்கப்பட்டன. 

சுழியில் தொடங்கும் ண, ல, ள, ன ஆகிய நான்கன் ஐகார உயிர்மெய்கள் மட்டுமே முன்னாகத் துதிக்கை பெற்றன.

இந்த விதிவிலக்கான வடிவங்களுக்குள் ஒரு சீர்மை இருந்தது.

கோத்தெழுதும் போது குழப்பம் தவிர்க்கவே அம்முறை ஆளப்பட்டது.

தமிழ் வளர்ச்சி விளையாட்டுகளுள் ஒன்று எழுத்துச் சீர்திருத்தம். கணினி வந்த புதிதில் தம்மை அறிவியலறிஞர்கள் என்று கருதிக் கொண்ட சில தொழில்நுட்பர்கள் பத்தாம் பசலிப் பண்டிதர்களை எள்ளி நகையாடி எழுத்துச் சீரைத் திருத்தும் விளையாட்டில் திளைத்தார்கள்.

தமிழ்ப் பற்றாளர்கள்,தமிழாசிரியருட் சிலர் , தாமும் அறிவியல் நோக்கினர் என்று கருதியும், பெரியார் பற்றாளர்கள் காட்டுமிராண்டி மொழியைப் பகுத்தறிவு மொழியாக மாற்றக் கருதியும் சீரைத் திருத்தும் விளையாட்டில் கலந்து கொண்டார்கள்.

No comments:

Post a Comment

இலக்கண மறுப்பு என்னும் பொறுப்பின்மை

வட்டார வழக்குதான் மக்கள் மொழி .அதுதான் உயிருள்ளது என்று மிகையழுத்தம் தரும் குழு ஒன்று விறுவிறுப்பாக இயங்கிக்கொண்டிருந்தது. அப்படித்தான் எழுத...